யாழில் மூன்று சிறுவர்கள் மாயம்! பெற்றார் அவசர வேண்டுகோள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று மாலையிலிருந்து காணாமல் போன சிறார்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளுமாறு அந்தக் கிராமத்து மக்களால் உருக்கமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 06 மணியளவில் சிறார்கள் மூவரும் ஒரே இடத்தில் காணப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை என்றும் கிராமத்து மக்களால் நாகர்கோவில் பகுதி முழுமையிலும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தேடுதல் வெற்றியளிக்காத நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸாரும் அங்கு சென்று சிறார்களைத் தேடியிருக்கின்றனர்.

பாதுகாப்பு வலயப்பகுதி உள்ளடங்கலாக அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முயற்சி தோல்வியடைந்த நிலையில் பொலிஸார் தற்போது உறவினர்களிடம் சம்பவம் தொடர்பில் விசாரித்துவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த தலா பத்து வயதுடைய கலியுகமூர்த்தி மதுசன், புஸ்பகுமார் செல்வகுமார் ஆகியோருடன் 17 வயதுடைய சந்தியோகு தனுசன் என்ற சிறுவனும் காணாமல் போயுள்ளார்.

சந்தியோகு தனுசன் மன நலன் குன்றியவர் என்றும் அவர் 10 வயது சிறுவர்களுக்குரிய பண்பியல்புகளைக் கொண்டுகாணப்படுவதாகவும் தெரிவித்துள்ள அந்தக் கிராமத்து மக்கள் இவர்கள் குறித்த தகவல் ஏதும் கிடைத்தால் 0776954359 என்ற இலக்கத்தின் ஊடாக வேலுப்பிள்ளை கோபாலபிள்ளை என்பவரைத் தொடர்புகொள்ளுமாறு உருக்கமாக கோரிக்கைவிடுத்துள்ளனர்.