மீண்டும் வைரலாகும் ரஞ்சன் – ஹிருணிகா ஒலிப்பதிவு! ஹிருணிகா கணவர் திடீர் முடிவு?

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரின் மற்றுமொரு தொலைபேசி உரையாடலொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது குரல் அல்லவென கூறும் இரண்டாவது ஒலிப்பதிவையும் தாண்டிச் செல்லக்கூடிய வகையில் மிகவும் மோசமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தும் ஒலிப்பதிவே வலைத்தளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிக்கும் விதமான உரையாடலேயே இதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் கணவர் வீட்டை விட்ட வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இந்த தகவலை உறுதிப்படுத்த ஹிருணிகா தரப்பை தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கிடைக்காததால் உறுதிப்படுத்த முடியவில்லை என கொழும்புச் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.