கிளிநொச்சியில் பகிரங்கமாக நடத்தப்படும் விபச்சார விடுதி..! வெளிச்சத்தில் உண்மைகள்…

கிளிநொச்சி- விநாயகர்புரம் பகுதியில் இடம்பெற்று வரும் விபச்சார விடுதியை அங்கிருந்து அகற்றுவதுடன் அதனை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரி பிரதேசமக்கள் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

தனிநபர் ஒருவர் பிற பிரதேசங்களிலிருந்து அங்கு பெண்களை அழைத்து வந்து விடுதி ஒன்றை நடத்தி வருவதாகவும், இதனால் தமது கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனை தடுப்பதற்கு பிரதேச இளைஞர்கள் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது பலனளிக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் எதிர்காலத்தில் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய மக்கள், குறித்த சமூக சீரழிவிற்கு 15 வயதிற்கு குறைந்த சிறுவர்களும் செல்வதை அவதானித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கிராமத்தில் மணம் முடித்தல், காணிகளை வாங்க விரும்புவோர் கிராமத்தின் பெயரை கேட்டு விலகி செல்வதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சமூக விரோத செயற்பாட்டினை கட்டுப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.