மக்களே அவதானம்…போலி தங்கம் விற்ற 7 பேர் சிக்கினர்!

அநுராதபுரம் பகுதியில் தங்கம்முலாம் பூசப்பட்ட உலோகத்துண்டுகளை தங்கமென விற்பனை செய்த சந்தேக நபர்கள் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பஸ் தரிப்பிடத்தின் அருகில் நேற்றைய தினம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் , மிஹிந்தலை , பானியங்கடவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 – 55 ஆகிய வயதுக்கு இடைப்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதானவர்களிடமிருந்து 270 கிராம் நிறையுடைய தங்கம் பூசப்பட்ட உலோகத்துண்டுகளும் , தெலைபேசி , கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.