யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பில் 17 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச பிரிவிற்குட்பட்ட கித்துள் ஆற்றில் இருந்து 17 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் யாழ்பாணத்தினை சேர்த்த மொகமட் அசான் எனும் இளைஞர் என இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இச் சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.