கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பான பகீர் காணொளி வெளியானது

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் முதலாம் இரண்டாம் வருட மாணவர்கள் இடையே இடம் பெற்ற தாக்குதலில் இரு முதலாம் வருட மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கால வரையறை இன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த பல்கலைகழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் வன்முறையற்ற மாணவர் அமைப்பு என பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று பகல் வன்முறையற்ற மாணவர் அமைப்பை ஆரம்பித்த முதவாம் ஆண்டு மாணவர் இருவர் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த முதலாம் ஆண்டு இரு மாணவர்கள், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் சிலமணிநேரம் பதற்ற நிலமை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில் புதிய அரசாங்கத்தினால் பகிடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாணவர்கள் இவ்வாறான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை விமர்சினத்திற்குள்ளாகியுள்ளது.