கின்னஸ் சாதனை படைக்கச் சென்ற இரட்டையர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

கொஸ்கொட, இந்துருவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இரட்டையர்கள் நால்வர் மற்றும் அவர்களின் தாய், யுவதி ஒருவர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஆகியவர்களே காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதிக் கொண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று இலங்கை இரட்டையர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கின்னஸ் சாதனை படைப்பதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிய சிலரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.