வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு 3ஆயிரம் ரூபாய் தண்டம்

ஊர்காவற்துறை மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு 3ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து ஊர்காவற்துறை நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்றைய தினம் பொது சுகாதர பரிசோதகர் குறித்த வழக்கை தாக்கல் செய்தார்.

அதன் மீதான விசாரணையின் போது குறித்த பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டர். அதனை அடுத்து பெண்ணுக்கு நீதிவான் 3000 ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.