யாழில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் கத்தியால் வெட்டி மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் காணப்படுகிறது.

மிருசுவில் துர்க்கை அம்மன் ஆலயத்திற்குச் செல்லும் வீதிக்கு சமீபமாக குறித்த சடலம் காணப்படுகிறது.

நெஞ்சுப்பகுதி, தலை போன்ற பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் குத்தி காயப்படுத்தப்பட்ட காயங்கள் காணப்படுகின்றன. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் பொலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.