அம்மாவுடன் சண்டையிட்ட அப்பாவை தடுத்த 16 வயது மகள்… மகளை கதற கதற தீ வைத்த கொடூரம்

உக்ரைன் நாட்டில் தந்தை ஒருவர் குடிபோதையில் மகளை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் நடாலியா. இவரது மகள் அன்னா கிறிஸ்டிகா(16). குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய நடாலியா எந்நேரமும் குடித்து விட்டு மனைவியை போட்டு அடிப்பதை வேலையாக வைத்துள்ளார்.

சம்பவத்தன்று போதையில் மனைவியை அடித்தவரை அவரது மகள் அன்னா பின்னே வந்து கட்டிப்பிடித்து அடிக்கவிடாமல் தடுத்துள்ளார். மகளின் பிடியிலிருந்து விடுபடமுடியாத தந்தை, மனைவியை அடிப்பதை நிறுத்திவிட்டு உடனே கோபத்தில் வெளியே சென்றுவிட்டார்.

சற்று நேரத்தில் வீடு திரும்பிய நடாலியா, மகள் அன்னா தனியே இருப்பதை அறிந்து, கதவை அடைத்துவிட்டு, கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனில் இருந்த பெட்ரோலை வீடு முழுவதும் ஊற்றி நெருப்பை பற்ற வைத்துள்ளார்.

இதை பார்த்து அலறிய அன்னா, கதவை திறந்து தப்பி ஓட முயன்ற போது, அவரை கெட்டியாக பிடித்து நிறுத்திய தந்தை முகத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

முகம் முழுவதும் அன்னாவுக்கு எரிந்து, வெந்து போன நிலையில் அலறிய அன்னாவை அக்கம்பக்கத்தினை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நடாலியாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.