ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கை சிங்களத்தில் மட்டுமே உள்ள காரணத்தினால் சபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஊழல் மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பான அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றது.
இதன்போது, குறித்த அறிக்கைகள் சிங்களத்தில் மட்டுமே உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து குறித்த அறிக்கைகள் மீதான விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையின் தமிழ் மொழி மூலமான பிரதிகள் கிடைக்காமைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இந்த அறிக்கைகளின் பிரதிகளை தமிழ் மொழியில் அச்சிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.