இலங்கையில் சிறுமி ஒருவரிற்கு நேர்ந்த பதைபதைக்கும் நிலை! பெற்றோர்களிடம் முக்கியமான வேண்டுகோள்

தனது வீட்டில் வேலைக்காக அமர்த்தப்பட்ட சிறுமி ஒருவரை தொடர்ந்து தமது பாலியல் இச்சையைதீர்க்க பயன்படுத்தும் ஒரு கொடுரன் பற்றி முகநூல்வாசி ஒருவர் வேதனையுடன் பதிவிட்ட பதிவு இது.

இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தன் வீட்டில் வேலை செய்யும் சிறுமியை தொடர்ச்சியாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக ஆதாரங்களுடன் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் தான் விரும்பும் நேரமெல்லாம் தமது வீட்டில் பணிப்பெண்ணாக உள்ள சிறுமியை தமது காம இச்சையை தீர்க்க பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

நாட்டில் வறுமையான ,நோய் வாய்ப்பட்ட பெற்றோர்கள் தங்களுடைய பெண் சிறுமிகளை வேலைக்கு அனுப்பி அதில் கிடைக்கும் சிறுபணத்தை வைத்து வாழ்க்கையை நடந்துகின்றார்கள்.

ஆனால் வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் சிறுமிகள் சில ,வீட்டு எஜமானர்களால் சீரழிக்கப்படுவது எத்தனை பேருக்கு தெரியும்? எதுவும் தெரியாத அப்பாவி சிறுமிகளின் வாழ்க்கை இப்படியான கொடூரன்களால் அவர்களின் எதிர் காலமே கேள்விக்குறியாக்குகின்றது.

குறித்த சிறுமியின் நலன் கருதி சில அநாகரிகமற்ற புகைப்படங்களை பதிவு செய்ய விரும்பவில்லை என அந்த முகநூல்வசி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சிறுமியை போல, தமது சிறுமிகள் இனியும் பாலியல் பலாத்காரம் செய்யப்படாமல் இருக்க பெற்றோர்களே சின்னஞ்சிறு பிள்ளைகளை வீட்டுவேலைக்கு அனுப்பும் போது கவனமாயிருங்கள். உங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை சிதைப்பதற்கென்றே சில மிருகங்கள் உலவுகின்றன.

இதேவேளை இலங்கையில் இவ்வளவு கேடுகெட்ட மனிதமிருகங்கள் இருப்பது வேதனையாகவுள்ளதுடன் , இவர்களை போன்றவர்கள் நாட்டுக்கு எத்தனை அபாயகரமானவர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் . அதற்காகவே இதனை பதி செய்ததாக குறித்த முகநூல்வாசி வேதனையுடன் கூரியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமியை சீரழித்த இக்கயவனை சிறுவர் பாதுகாப்பு அமைச்சு , இலங்கை புலனாய்வு படையினர் மற்றும் இலங்கை அரசாங்கம் இனம் கண்டு சரியான தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாளை இன்னுமொரு சிறுமிக்கும் இதுபோல நடக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.