குழந்தை பிறந்து சில நாட்களில் தூக்கில் தொங்கிய பொலிஸ்காரர்… இதெல்லாம் ஒரு காரணமா?

சென்னையில் பொலிஸார் ஒருவர் குழந்தை பிறந்து சில தினங்களில் பெயர் வைப்பதில், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் வைரமுத்து(38). சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பொலிசாக வேலை செய்து, அங்குள்ள விடுதியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். இவரது மனைவி அமலா புஷ்பம். சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு பெயர் வைப்பதில் வைரமுத்துவுக்கும், அமலா புஷ்பத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சில நாட்களாகவே தம்பதிக்குள் ஏற்பட்ட இந்த தகராறு கடைசியில் வைரமுத்து தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நைட் டியூட்டி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வைரமுத்து அறைக்குச் சென்று வெகுநேரமாகியும் கதவைத் திறக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகித்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார்.

தகவலறிந்து வந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கும் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.