நாவலப்பிட்டியில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு – மற்றுமொருவர் படுகாயம்!

நாவலப்பிட்டி-ஹப்புகஸ்தலாவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இன்னுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ருவான்புர ஹப்புகஸ்தலாவ வீதியில் ருவான்புர பிரதேசத்தில் சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த முச்சக்கரவண்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் ருவான்புர பகுதியை சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் இனங்கண்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதியும், அதில் பயணித்தவரும் மதுபோதையில் இருந்ததாகவும், முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவும் இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் சாரதி காயங்களுடன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.