இலங்கை பெண் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்! அச்சத்தில் மக்கள்

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இது கொரோனா வைரஸ்அறிகுறியாக இருக்குமோ என எண்ணி இத்தாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

63 வயதான குறித்த இலங்கை பெண் இத்தாலியில் நேபிள்ஸ் நகரத்திலுள்ள கோட்டுக்னோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று குறித்து பெண் சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த பெண்மணி கடந்த செவ்வாயன்று இலங்கையில் இருந்து இத்தாலிக்கு சென்றிருந்த நிலையிலேயே அவருக்கு நோயின் அறிகுறிகள் காணப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.