அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் ஸ்ரீலங்காவிற்கு அழைத்து வாருங்கள்! ஜனாதிபதி கோட்டாபய உத்தரவு

சீனாவில் உயர் கல்விகளை மேற்கொள்ளும் மாணவர்களை அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் சிச்சுன் சென்ங்டு பகுதியில் 150 இலங்கை மாணவர்கள் கல்வி கற்றுவருகிறார்கள். அவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த 150 மாணவர்களையும் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகம், வெளியுறவு அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் என்பன இணைந்து மேற்கொண்டுள்ளன.

ஏற்கனவே அங்கிருந்து 3 இலங்கை மாணவர்கள் இலங்கைக்கு திரும்பினர் ஏனையவர்கள் சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு ஏற்ப அங்கேயே தங்கியிருந்தனர்.

எனினும் அவர்களையும் இலங்கைக்கு திருப்பியழைக்குமாறு கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக குறித்த சீன மாகாணத்தில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.