இளம்பெண்ணின் மனதை திருடிய நபர்!… வாலிபரின் படத்துடன் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

திருமணம் ஒன்றிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டத்தின் மேட்டூரை அடுத்த மாசிலாபாளையத்தை சேர்ந்தவர் ஹெலன் சிந்தியா, இவருக்கும் ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் வருகிற 30ம் திகதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இருவீட்டாரும் முழு வீச்சுடன் திருமணம் வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், மணமகன் வீட்டார் வைத்திருந்த போஸ்டர் வேற வெலவில் இருந்துள்ளது.

வழக்கம்போல் மணமக்களின் புகைப்படத்துடன், “வாலிபர் கைது” குற்றம் ”பெண்ணின் மனதை திருடியது” தண்டனை “அந்த பெண்ணையே திருமணம் செய்வது” என இடம்பெற்றிருந்தது.

அத்துடன் சாட்சியாக நால்வரின் புகைப்படங்களும் இருந்துள்ளன, இதை பார்த்த பலரும் போஸ்டரை போட்டோ எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.