5 லட்சம் பெறுமதியுடைய 4 கிலோ கஞ்சா – யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது (வீடியோ , படங்கள் )

5 லட்சம் பெறுமதியுடைய 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். அரியாலைபூம்புகார் பகுதியில் வைத்து இன்று(18) யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். சாவகச்சேரி கோவிலாக்கண்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய குறித்த நபர் சுமார் 5 லட்சம் பெறுமதியுடைய 4 கிலோ கேரளா கஞ்சாவினை விற்பனை செய்வதற்காக யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதிக்கு கொண்டு வந்துள்ளார்.
கஞ்சாவினை வாங்க வருவதாக கூறிய நபர்களுக்காக காத்திருந்த வேளையில், யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோவின் தலைமையிலான விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு மற்றும் துர்நடத்தைப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். விசாரணையின் பின்னர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் யாழ்;ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.