உலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்

உலகத்தில் உள்ள அனைத்து மக்களின் சுபீட்சத்திற்காக இலங்கையில் முதன்முறையாக ஸ்ரீ மஹா ருத்ர யாகம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

சிவனடியார்கள் மற்றும் சைவ ஆர்வலர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் ஆலயத்தில் செய்யப்படவுள்ளது.

இந்த மகா யாகத்தில் வேத பாராயணங்கள் மற்றும் பல்வேறுபட்ட விடயங்கள் இடம்பெறவுள்ளதோடு அனைத்து பொதுமக்கள் மற்றும் சைவ தமிழ் ஆர்வலர்களை யாகத்தில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.