கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டுள்ள மஹிந்த வீட்டு கடைக்குட்டி

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கனிஷ்ட புதல்வர் ரோஹித்த ராஜபக்ச கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் ரோஹித்த கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கலாநிதி பட்டத்திற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்கை நெறியைத் தொடர்ந்து வந்த ரோஹித்தவின் இறுதிப் பெறுபேறுகள் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன.

இதன்படி கலாநிதி பட்டமொன்றை ரோஹித்த பெற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக வியாபார முகாமைத்துவம் உள்ளிட்ட இன்னும் சில துறைகளிலும் ரோஹித்த கலாநிதி பட்டக் கற்கை நெறிகளை பயின்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.