தூக்கில் தொங்கிய மனைவியை அடக்கம் செய்துவிட்டு தற்கொலை செய்த கணவர்… சோகத்திற்கு பின்னணி காரணம் என்ன?

வயிற்றுவலியால் அவதிப்பட்ட மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதால் கணவரும், கைக்குழந்தையை விட்டுவிட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியைச் சேர்ந்த டெய்லர் வீரணன்(25). இவரது மனைவி பவித்ரா(22). இவர்கள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து தற்போது பவிக்ஷா என்ற குழந்தையும் உள்ளது.

பவித்ராவிற்கு சில மாதங்களாகவே வயிற்றுவலி ஏற்பட்டுள்ள நிலையில், பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாமல் தீவிரமாகவே இருந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்றும் வயிறுவலி அதிகமாகவே, வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த கணவர் கதறி அழுததோடு, மனைவியின் இறுதிச்சடங்கினையும் முடித்துள்ளார்.

பின்பு மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாத வீரணன், தனது வீட்டின் வெளியே இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது தாய், தந்தை இல்லாமல் அனாதையாக இருக்கும் பச்சிளம்குழந்தையை அவதானித்த உறவினர்கள் கலங்கியபடி காணப்படுகின்றனர்.