பிரபல பாடசாலையொன்றில் திடீரென மயங்கி விழுந்த 41 மாணவர்கள்!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேன – களுகல சிங்கள வித்தியாலயத்தில் உணவு விஷமடைந்தமை காரணமாக 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை உணவை உட்கொண்டதன் பின்னர் மாணவர்களுக்கு திடீரென மயக்கம், வாந்தி ஏற்பட்டதன் காரணமாகவே இவ்வாறு மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக 11 மாணவிகள் உள்ளடங்களாக 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் நடை​பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில், மாணவர்களுக்கு மாலு பணிஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை உட்கொண்ட மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் இது வரை 39 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், இரண்டு மாணவிகள்மாத்திரம் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.