காதலர் தினத்தில் திருமண பந்தத்தில் இணைந்த ஐந்தறிவு ஜீவன்கள்!!

காதலும், காதலர் தினமும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அது விலங்குகளுக்கும் உரித்தானதுதான் என்பதை உணர்த்தும் விசித்திர திருமணமொன்று தென்னிந்தியாவில் நேற்று முன்தினம்(புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

ஊர் பெரியார்கள், பிரமுகர்கள் என எல்லோரும் ஒன்றிணைந்து காதலர் தினத்தில் செம்மறியாடுகளுக்கு திருமணம் நடத்தி மகிழ்ந்துள்ளனர்.மங்கள வாத்தியம் இசைக்கப்பட்டு, மாலை மரியாதையுடன் இந்த செம்மறியாடுகள் அலங்கரிக்கப்பட்டு திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சென்னையில் நாய்க்கும், கழுதைக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.