சுவிட்சர்லாந்தில் மாயமான இலங்கைத் தமிழரிற்கு நேர்ந்த கதி

சுவிட்சர்லாந்தில் கடந்த ஒரு மாதகாலமாக மாயமான இலங்கைத் தமிழர் திருநெல்வேலி – இராமலிங்கம் சாலை – கெனடிலேலைச் சேர்ந்த – இராசரட்ணம் செங்குந்தரின் புதல்வன் – உதயகுமார் அகால மரணமடைந்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்தில் கடந்த 30 ஆண்டுகளாக குடியிருந்து வந்தவர் தற்போது 55 வயதாகும் உதயகுமார் ராயரட்னம்.

இவரையே கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

குறித்த நபரை தேடும் பணியினை முன்னெடுத்த காவல்துறையினருக்கும் சரியான விடை கிடைக்காத நிலையில் அவரை தேடுவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

தமது தந்தை திடீரென்று மாயமானதன் காரணம் என்னவென்று இதுவரை தங்களால் கண்டறியமுடியவில்லை என மகன் தெரிவித்துள்ளார்.