வவுனியாவில் மாயமான இளம் குடும்பபெண்! தகவல் தருமாறு உறவினர்கள் கோரிக்கை

வவுனியா பூந்தோட்டம் பகுதியினை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் மாயமாகியுள்ள நிலையில் அவர் தொடர்பில் தெரிந்தவர்கள் உடனடியாக வழங்குமாறு தகவல் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

47வயதுடைய மகேஸ்வரி செந்தில்செல்வன் என்பவரே இவ்வாரு காணம்போயுள்ள நிலையில் அவரது கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் கடந்த 29.01.2020 அன்று காலை 8.30 மணியளவில் வவுனியா நகருக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.

அதன் பின்னர் காலை 10.30 மணியளவில் குறித்த பெண்ணுக்கு அவரின் கணவர் தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்திய சமயத்தில் அவரின் தொலைபேசி செயலிழந்த நிலையில் இருந்துள்ளது.

இதனையடுத்து அன்றையதினம் மாலை வரை அவரை பல இடங்களில் தேடியும் குறித்த பெண் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகின்றது.

பின்னர் 30.01.2020 வவுனியா பொலிஸ் நிலையத்தில் கணவரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

எனினும் குறித்த பெண் காணாமல்போய் ஆறு நாட்கள் கடந்த நிலையிலும் இன்று வரை அவர் தொடர்பில் தகவல் ஏதும் இல்லை.

கடைசியாக இவர் வவுனியா நகருக்கு சென்ற சமயத்தில் பிங் கலர் சாறி அணிந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கோ (076 – 1560361 , 077 – 40112323 , 076 – 6647509 ) அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.