நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளிய அர்ஜூன் மகேந்திரன்

பிணை முறி மோசடி விசாரணையில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அர்ஜூன் மகேந்திரன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க இலங்கைக்கு வரவில்லை என தெரியவருகிறது.

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இன்று 15ஆம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து வாக்குமூலம் வழங்க வேண்டும் என்று கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன கடந்த 2 ஆம் திகதி கூறியிருந்தார்.

இதற்கு சர்வதேச பொலிஸார் ஊடாக அறிவிப்பாணை அனுப்பவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் அர்ஜூன் மகேந்திரன் நாடு திரும்பினால், உடனடியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளிய அர்ஜூன் மகேந்திரன்