மாணவி மீதான பகிடி வதை! யாழ்.பல்கலை மாணவர்கள் எட்டுப் பேருக்கு விதிக்கப்பட்டது தடை

யாழ் பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம் தொடர்பில் எட்டு மாணவர்களுக்கு சந்தேகத்தின் அடிப்படையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான தடையினை இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக மாணவர்களால் மாணவியர்களிற்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக தெரிவித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே குறித்த மாணவர்களுக்கு கல்விகற்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.