யாழில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி! சிக்கிய நபர்கள்

யாழ்ப்பாணம் நல்லூரடியில் இயங்கி வந்த திருமண மண்டபம் ஒன்றின் வளாகத்தின் பின்னால் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து, குறித்த விடுதி இன்று அதிரடியாக சுற்றிவளைக்கபட்டது.

இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க அழகியொருவரும், அவருடன் இருந்த ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.