நம் வீட்டில் பூஜைகள் செய்யும் போது மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடுவது வழக்கம்.
இதன்போது மஞ்சள் நீரை வீடு முழுவதும் தெளிப்பார்கள், இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
- மூலை, முடுக்குகளில் மஞ்சள் நீரை தெளிக்கும் போது கிருமிகள் அழிந்து விடும்.
- துஷ்ட சக்திகள் அண்டாது, அப்படியே இருந்தாலும் விலகிவிடும்.
- லக்ஷமியை ஈர்க்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு, துர்தேவதைகள் விலகி நல் தேவதைகள் வீட்டுக்குள் வருவர்.
- சம்பாதிக்கும் செல்வங்கள் நிலைத்திருக்கும்.
அத்துடன் பஞ்ச பாத்திரத்தில் துளசியுடன் மஞ்சள், பச்சை கற்பூரம், பன்னீர் இவைகளை கலந்து வைத்துவிட்டு அந்த நீரை வீடு முழுவதும் தெளித்தாலும் செல்வங்கள் பெருகும் என நம்பப்படுகிறது.