கொழும்பில் கட்டடம் இடிந்து விழுந்து பாரிய அனர்த்தம்! உரிமையாளர் உட்பட 7 பேர் பலி (Photos)

கொழும்பு – கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் இருவர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

adams group of company என்ற கட்டடத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தத்தில் கட்டடத்தின் உரிமையாளர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.