யாழில் பல்கலைக்கழக மாணவிகளை குறிவைத்து நடந்த மோசடி! சிக்கிய நால்வர்

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் பல்கலைக்கழக மாணவிகளை குறிவைத்து அவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண் டோ தெரிவித்தார்.

கடந்த வாரம் பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்திய யாழ்ப்பாண பொலிஸார் நல்லூர் பின் வீதியில் உள்ள இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.

அத்துடன் திருட்டுப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நகரப்பகுதியில் தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் இதன்போது கைது செய்யப்பட்டதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் உறுதிப்படுத்தினார்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளை திருடியதாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

தொலைபேசிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய முற்பட்ட போது தாம் கைது செய்யப்பட்டதாக அவர்கள் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்

கைது செய்யப்பட்ட நால்வரும் நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்தப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.