கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்று நிலையத்தில், மெக்ஸிகோவிலிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, மெக்ஸிகோவிலிருந்து கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்துக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியொன்று சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பொதியிலிருந்து 502 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பொதியினை பெற்றுக்கொள்ள வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பன்னிப்பிட்டிய – பெலென்வத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூரியுள்ளனர்.
இதனையடுத்து கைதான சந்தேக நபரிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.