தங்கம் வாங்க காத்திருப்போருக்கு பேரிடியாய் வந்த செய்தி

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தங்கத்தின் விலை குறையுமா என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கிடு கிடு என தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது.

ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பெப்ரவரி மாதத்திலும் அதே நிலைதான் தொடர்கிறது.

அந்த வகையில் இன்று சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.49.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 200 அதிகரித்து ரூ.49,600 ஆக விற்கப்படுகிறது.

இதனால் தங்கம் வாங்க காத்திருப்போர் தொடர் விலையேற்றத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.