யாழ் பல்கலைக்கழக மாணவன் மீது கொடூரமாக தாக்குதல் மேற்கொண்ட கும்பல்

யாழ். பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தில் இறுதி ஆண்டு மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதேசத்தில் நேற்று இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக காயமடைந்த மாணவன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏ.இந்திரன் என்ற மாணவனை, முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் மாணவனின் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் மேற்கொண்டமைக்கான காரணம் மற்றும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.