காதலர் தினத்தினை ஜாலியாக கொண்டாடிய காதல் ஜோடி… பரிதாபமாக உயிரைவிட்ட சோகம்

காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்றைய தினத்தில் காதலர் தினத்தினைக் கொண்டாடிவிட்டு இன்று காதல்ஜோடி ஒன்று தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மைசூர் யமகும்பா பகுதியைச் சேர்ந்தவர் சிந்துஸ்ரீ(19). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சச்சின்(25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே அவசர அவசரமாக சிந்துஸ்ரீக்கு மாப்பிள்ளை பார்த்து இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்துள்ளது.

இந்நிலையில் காதலனை தொடர்பு கொண்டு பேசிய சிந்துஸ்ரீ வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். பின்னர் இருவரும் குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணைக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துவிட்டு, வாழ்வில் ஒன்று சேர முடியாத துக்கத்தில் இருவரும் நீர்த்தேக்கத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதனை அவதானித்த மக்கள் பின்பு பொலிசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில், சுமார் 1 மணி நேரம் தேடுதலுக்கு பின்பு இருவரது உடலையும் கைப்பற்றியுள்ளனர். பின்பு குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, இருவரின் உடல்களை அவதானித்து கதறி அழுதுள்ளனர்.

பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.