யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நடந்தது பகிடிவதை அல்ல. பகிடிவதை என்ற பெயரில் செய்யப்பட்ட அச்சுறுத்தல் என வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பந்தமாக விசாரணைகள் இடம்பெறுகின்றதா? பகிடிவதையை தடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா? என இதன்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
“பகிடிவதையைக் கூட அரசாங்கம் தடை செய்திருக்கின்றது. ஆனால், தற்போது நடந்தது பகிடிவதை அல்ல. பகிடிவதை என்று சொல்கின்ற பெயரில் செய்யப்பட்ட அச்சுறுத்தல், துன்புறுத்தல், சித்திரவதை போன்ற விடயங்களும், மனித உரிமை மீறல்களும் தான்.
எனவே, நிச்சயமாக இவற்றுக்கு எதிராக சட்டம் தன்னுடைய கடமையைச் செய்யும்.
எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ, தனிப்பட்ட இலாப நட்டங்களையோ கணக்கில் கொள்ளாமல் அனைவரும் இந்தப் பொதுப்பணிக்காக ஒன்றிணைய வேண்டும் என்று வட மாகாண மக்கள் மற்றும் வட மாகாண அரசியல் பிரதிநிதிகள் என அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார்.






