இரண்டாவது கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய சவுந்தர்யா.. புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா கடந்த ஆண்டு இரண்டாவது திருமண செய்துகொண்டார். இது அனைவருக்கும் தெரிந்தது தான்.

அதன் பின்னர், இவர்கள் இருவரும் ஹனிமூனிற்காக வெளிநாடு சுற்றி வந்தனர். அதை சவுந்தர்யா அவரின் சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் இந்த வருடம் தன்னுடைய முதல் வருட திருமண நாள் கொண்டாட்டத்தையும், இரண்டாவது ஆண்டு காதலர் தினத்தையும் தன்னுடைய கணவர் விஷாகன் உடன் தினத்தையும் காதல் நகரமான பாரிசில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

அதில், சௌந்தர்யா பாரிஸ் ஈபிள் டவர் முன்பு தன் கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த வருடம் திருமணம் முடிந்த கையோடு இவர்கள் இருவரும் முதல் காதலர் தினத்தை கொண்டாடினார்கள். தற்போது தனது இரண்டாவது காதலர் தினத்தையும், முதல் கல்யாண நாளையும் பாரிஸில் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்கள்.