காதலன் கண்முன்னே துடிதுடித்து இறந்த காதலி… கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!

சேலம் ஏற்காடு பகுதியில் வசித்து வரும் ரவிராய் என்பவருடைய மகள் ஆர்த்தி. இவர் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் மாணவர் அசோக் என்பவரும் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த காதலர் தினத்தில் தான் மூன்று லட்சத்திற்கு ஆசை ஆசையாக வாங்கிய இருசக்கர வாகனத்தில் வெளியில் செல்ல திட்டமிட்ட அவர்கள், பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது மட்டுமின்றி காதலிக்கு இருசக்கர வாகனத்தினை ஓட்டுவதற்கும் கற்றுக்கொடுக்க முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது இவர்களின் இருசக்கர வாகனம் மோதவே ஆர்த்தி சாலையின் இடது பக்கத்திலும், அசோக் சாலையின் வலது பக்கத்திலும் விழுந்துள்ளனர்.

இந்நிலையில் பின்னே வந்த லாரி சக்கரத்தில் சிக்கி ஆர்த்தி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அசோக் காயங்களுடன் தன் கண் முன்னே காதலி இறந்த சம்பவத்தை பார்த்து கதறி துடித்துள்ளார். பொலிசார் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.