நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான முழுமையான தேர்தல் முடிவுகள் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளமை யாவரும் அறிந்த விடயமே.இந்த கட்சி 231 சபைகளில் வெற்றிபெற்றுள்ளது. எனினும், இதையடுத்து இரண்டாவது பெரும் கட்சியாக தமிழரசுக் கட்சி முன்னேறியுள்ளது.
தமிழரசுக்கட்சிக்கு கீழேயே ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் வெற்றிகள் உள்ளன.ஒவ்வொரு கட்சிகளும் வெற்றி பெற்ற சபைகளின் முழு விபரம் கீழே…
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 231 சபைகளில் வெற்றி
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 43 சபைகளில் வெற்றி
ஐக்கிய தேசிய கட்சி – 34 சபைகளில் வெற்றி
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 7 சபைகளில் வெற்றி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 5 சபைகளில் வெற்றி
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4 சபைகளில் வெற்றி
சுயேட்சைக் குழு – 4 சபைகளில் வெற்றி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2 சபைகளில் வெற்றி
ஈழ மக்கள் ஜநனாயக கட்சி – 2 சபைகளில் வெற்றி
தேசிய காங்கிரஸ் – 2 சபைகளில் வெற்றி
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 சபையில் வெற்றி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 சபையில் வெற்றி
தமிழர் விடுதலை கூட்டணி – 1 சபையில் வெற்றி
தேசிய மக்கள் கட்சி – 1 சபையில் வெற்றி
எக்சத் லங்கா மகா சபா கட்சி – 1 சபையில் வெற்றி
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு – 1 சபையில் வெற்றி
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலி இறுதி முடிவுகள் கீழே….