பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அரியாலையில் உள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
இதன்போது கொள்ளையிடப்பட்ட 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் 4,50,000 பெறுமதியானவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அரியாலையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.