அமைச்சருக்கு பாடம் புகட்டிய கோட்டாபய! மற்றவர்களும் கலக்கத்தில்

வன இலாகா பெண் அதிகாரி ஒருவருடன் வாய்த்தர்க்கம் செய்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு ஜனாதிபதியிடம் இருந்து அவசர அழைப்பு கிடைத்துள்ளது.

தொலைபேசியில் இராஜாங்க அமைச்சரை தொடர்பு கொண்ட ஜனாதிபதி, அரச அதிகாரிகளுடன் எவ்வாறு நடந்துகொள்வது பற்றி பல மணித்தியாலங்கள் உரையடியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது

மேலும் அனாவசிய பிரச்சினைகளை தற்போது ஏற்படுத்திவிட வேண்டாம் என ஆலோசனை கூறியுள்ள ஜனாதிபதி, குறித்த அரச அதிகாரி பக்கமே இந்த விடயத்தில் அரசாங்கம் நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அத்தடன் ஏனைய அமைச்சர்களும் கலக்கத்தில் உள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.