இப்படி ஒரு வலயக்கல்விப் பணிப்பாளரை இது வரை யாரும் பாத்திருக்க முடியாது!

மட்டக்களப்பு வாகரைபிரதேச மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துமாறு கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி தமது பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அறிவுறுத்தி வருகின்றார்.

இது தொடர்பில் மாணவர்களின் பெற்றோர்களிற்கு அவர் ஆலோசனையினையும் வழங்கி வருகின்றார்.

அவருடன் திட்டமிடல் பிரதிக்கல்விப்பணிப்பாளர், மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் உடன்சென்று பெற்றோர்களிடம் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு கூறிவருகின்றனர்.

இந்நிலையில் கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினரின் இஅந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

அத்துடன் இப்படி ஒரு வலயக்கல்விப்பணிப்பாளரை இது வரை யாரும் பாத்திருக்க முடியாது என்ரும், இவர் எமது வலையத்துக்கு கிடைத்தது எமக்கு பெரும் பாக்கியம் எனவும் அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.