யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
கல்லூரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தைக் கண்டித்தும் இந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து கல்லூரியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி அவர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொழில் நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு வாய்த்தர்க்கமாக மாறி அடிதடி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாள்வெட்டுக் குழுவினர் சென்று கல்லூரியில் அடாவடித்தனங்களில் ஈடுபட்ட நிலையில் ஆசிரியர்கள் மூவர் காயமடைந்தனர்.

அத்துடன் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டிருந்தது.
இந் நிலையிலையே அந்த வன்முறைக் குழுவின் சம்பவங்களைக் கண்டித்து மாணவர்கள் ஆசரியர்கள் பணியாளர்கள் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதன்போது மாணவர்கள் மத்தியில் ஏற்படிருக்கும் அச்ச உணர்வைப் போக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர், பிரதிப் பொலிஸமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு மகஐரொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






