ஆட்சியமைக்க யாருடைய தயவும் தேவையில்லை! நாமல்

ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்ற, ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு எந்த ஒரு கட்சியிடமும் ஆதரவை பெறப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவுடன் இணைந்து செயற்பட தயார் என ஸ்ரீசுதந்திர கட்சியின் பெலியத்த தொகுதி அமைப்பாளர் இராஜ் பெர்னான்டே தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் வழங்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.