மருமகளை கோடாரியால் சரமாரியாக வெட்டி கொலை செய்த மாமனார்… பின்னணியில் நிகழ்ந்த போராட்டம்

சேலம் மாவட்டத்தில் மருமகள் மீது ஆசைகொண்ட மாமனார் ஒருகட்டத்தில் மருமகளை வெட்டிக் கொலை செய்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தம்பட்டம் அருகே உள்ள கிராமம் உலிபுரம் நரிகரட்டைச் சேர்ந்தவர் பழனி(63). இவரது மகன் அறிவழகன் கூட்டுறவு நிறுவனத்தில் உர விற்பனை செய்து வருகின்றார். இவரது மனைவி அமுதா(40). இவர்களுக்கு அஜித்(19), ரித்திக்(16) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் மகனின் மனைவி அமுதா மீது பழனிக்கு தவறான நோக்கம் இருந்து வந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே மாமனாரின் பார்வை தவறாக இருந்ததை குடும்பத்தில் கூறினால் பிரச்சினை ஏற்படும் என்று கூறாமல் சமாளித்து வந்துள்ளார் அமுதா.

பின்பு இதனை மனதிற்குள்ளேயே வைத்திருந்த பழனி, மகன் வேலைக்குச் சென்ற பின்பு அமுதாவிடம் அத்துமீறி உள்ளார். உடனே அமுதா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அருகில் இருந்த கோடாரியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அமுதா இறந்துள்ளார்.

அமுதாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் பின்பு பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் கொலை குற்றவாளி பழனி பொலிசில் நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளார்.