கோட்டாபய வெளியிட்டுள்ள அதி முக்கிய வர்த்தமானி! களத்தில் முப்படையினர்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொது ஒழுங்கை பராமரிப்பதற்காக, அனைத்து ஆயுதப் படையினரையும் ஈடுபடுத்தும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது பிரிவு (பகுதி 40) இன் படி, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், ஜனாதிபதி இந்த வர்த்தமானியை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த நீர்ப்பரப்பில் பொது ஒழுங்கை பேணும் பணியில், இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றை ஈடுபடுமாறு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.