லண்டனில் தமிழர் கடையில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையன்! ஹீரோவான யாழ் இளைஞர்…

லண்டனில் தமிழர் கடை ஒன்றில் துப்பாக்கியோடு புகுந்த கொள்ளையன் அங்கிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓட முற்பட்டுள்ளார்.

இதன்போது கொளைக்காரனின் கவனம் பணத்தை எடுப்பதில் குறியாக இருப்பதைக்கண்ட கடையில் வேலைசெய்யும் ஈழத் தமிழர் இளையன் ஒருவர் மின்னல் வேகத்தில் பாய்ந்து கொள்ளையன் கையில் இருந்த துப்பாக்கியை சினிமா ஸ்டைல் பாணியில் பிடுங்கியதுடன் நையப்புடைத்துள்ளார்.

இதனையடுத்து , தப்பினால் போதும் என கொள்ளையன் ஓடிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கொள்ளையனை விரட்டிய யாழ்ப்பாணம் நீர்வேலி இளைஞரின் துணிச்சலை பலரும் பாராட்டியுள்ளார்கள்.