ரோட்டில் தனியாக சென்ற நபரிடம் மூன்று பெண்கள் ஒன்று சேர்ந்து செய்த கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு சில விபச்சார பெண்களால் ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் இங்கேயும் அரங்கேறியுள்ளது.

சித்ரதுர்கா மாவட்டம் ஒரு கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தவர் பிராஜ்வால் (21). இவர் சுமார் மதியம் 12 மணியளவில் பி.எம்.டி.சி பேருந்து நிலையத்திலிருந்து கே.எஸ்.ஆர்.டி.சி மைதானத்திற்கு செல்ல இருந்த போது மூன்று பெண்கள் அங்கு வந்து பிராஜ்வாலை வழிமறைத்துள்ளனர்.

இதனால். அதிர்ச்சியடைந்த அவர் என்ன செய்வதுதெண்டு என தெரியாமல் திகைத்து நின்றுள்ளார். இதையடுத்து அந்த மூன்று பெண்கள் பிராஜ்வாலை மிரட்டி அவரிடம் இருந்த 4000 ரூபாய் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால், பணம் தரவில்லை என்றால், தங்களை கெடுக்க முயன்றதாக கூறி கூச்சலிடுவோம் என மிரட்டி உள்ளனர்.

இதனா, வேறு வழியின்றி 4,000 ரூபாயை கொடுத்துவிட்டு அருகிலிருந்த போலீசாரிடம் நடந்ததை கூறியுள்ளார். இவரின் புகாரின் அடிப்படையில் அந்த பெண்களை பிடிக்க காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.