மைத்திரியின் புதிய தீர்மானம்?

மீள்குடியேற்ற விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விரைவில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சி பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள நிலையிலும் காத்தான்குடி நகர சபையை அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளதுடன், கிழக்கிலும் சுதந்திரக் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கான நிலை வௌிப்பட்டுள்ளது.

இதற்கான மூலகாரணி ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி விரைவில் அவரை அமைச்சரவை அந்தஸ்துக் கொண்ட அமைச்சராக நியமிக்க உத்தேசம் கொண்டுள்ளார்.

அத்துடன் புதிதாக வேறு சிலரும் வெகுவிரைவில் அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும், அது குறித்த கலந்துரையாடல் ஒன்று ஞாயிறு மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.