அமைச்சர் ராஜித தலைமறைவு!

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமறைவாகி விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலின் போது இலங்கை முழுவதும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு அமைச்சர் ராஜித எமது கட்சியான பொதுஜன பெரமுணவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியிருந்தார்.

ஆனாலும், கடைசியில் அவரின் தேர்தல் தொகுதியைக் கூட தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சரின் சொந்தத் தொகுதியான பேருவளைத் தொகுதியில் கூட பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், ​தோ்தல் தோல்வியில் அமைச்சர் ராஜிதவை வௌியில் காணவே கிடைக்கவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என்றும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.